திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.12 திருக்கோட்டாறு பண் - காந்தாரபஞ்சமம் |
வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் கும்மறை
ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்லல் இல்லையே.
|
1 |
ஏலம லர்க்குழல் மங்கைநல் லாளிம வான்மகள்
பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியுங்
கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
ஆலநீ ழற்கீழ் இருந்தறஞ் சொன்ன அழகனே.
|
2 |
இலைமல்கு சூலமொன் றேந்தினா னும்இமை யோர்தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி கண்டனுங்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை யேற்றுகந் தஅழ கனன்றே.
|
3 |
ஊனம ரும்முட லுள்ளிருந் தவ்வுமை பங்கனும்
வானம ரும்மதி சென்னிவைத் தமறை யோதியுந்
தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
தானம ரும்விடை யானும்எங் கள்தலை வனன்றே.
|
4 |
வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனுஞ்
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனுங்
கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள்
நம்பபென னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே.
|
5 |
பந்தம ரும்விரல் மங்கைநல் லாளொரு பாகமா
வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர் தன்மிகுங்
கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை அல்லலே.
|
6 |
துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்
வண்டம ருங்குழல் மங்கைநல் லாளொரு பங்கனுந்
தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
அண்டமும் எண்டிசை யாகிநின் றஅழ கனன்றே.
|
7 |
இரவம ருந்நிறம் பெற்றுடை யஇலங் கைக்கிறை
கரவம ரக்கயி லையெடுத் தான்வலி செற்றவன்
குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
அரவம ருஞ்சடை யான்அடி யார்க்கருள் செய்யுமே.
|
8 |
ஓங்கிய நாரணன் நான்முக னும்முண ராவகை
நீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்நிழற்
கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெரு மான்அம ரர்க்கம ரனன்றே.
|
9 |
கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில் லாததோர்
தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத் தன்னருள்
கொடுக்ககில் லாக்குழ கன்அம ருந்திருக் கோட்டாற்றுள்
இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை யாவரே.
|
10 |
கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக் கோட்டாற்றுள்
அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனைக்
கடிகம ழும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்சொற்
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |